"குழந்தைகளை விரட்டிய ஹோட்டல் மீது நடவடிக்கை" - மனிஷ் சிசோடியா

ஞாயிறு, 12 ஜூன் 2016 (17:10 IST)
அழுக்கு உடையில் வந்த ஏழைக் குழந்தைகளை விரட்டிய ஹோட்டல் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
 

 
டெல்லியில், டேராடூனை சேர்ந்த சோனாலி ஷெட்டி, தனது கணவர் பிறந்த நாளை கொண்டாட ஏழைக் குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் அழுக்கு உடையில் உள்ளதாக கூறி விரட்டப்பட்டனர். இதைக் கண்டித்து அப் பெண்மணி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் குறித்து டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அந்த ஹோட்டலை இழுத்துமூடப்படும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்