ராஜினாமா செய்யவில்லை என்றால் சமூக வலைத்தளங்களில் என் நடத்தையைப் பற்றி தவறான வதந்திகளையும், குற்றசாட்டுகளையும் பரப்பப்போவதாக மிரட்டினார். எனவே என்னைப்பற்றிய அவதூறான செய்திகள், படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி சசிகலா புஷ்பாவின் அவதூறு படங்களை உடனடியாக சமூக வலைத்தளங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும் என கூறினர். மேலும், அவதூறு ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் வெளியிடுவதும், செய்தி வெளியிடுவதும் தடை செய்யப்படுகிறது.