பிரணாப் முகர்ஜியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

வெள்ளி, 31 ஜூலை 2015 (04:47 IST)
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென சந்தித்து பேசிய நிகழ்வு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும் டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே கடும் அரசியல் மோதல் நிலவி வருகிறது. 
 
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
 
இந்தச் சந்திப்பின் போது, டெல்லியில் நிலவும் தற்போதைய நிலவரம் குறித்து ஜனாதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.ஆனால்,

இந்த சந்திப்பின் போது, டெல்லி அரசு நிர்வாகம் சம்பந்தமாகவே இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. டெல்லி அரசியல் நிலவரம் குறித்து ஏதும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்