42 வயதான சஞ்ஜய் என்ற அந்த நபர் செல்ஜாவின் வீட்டில் வேலை செய்பவரின் கணவர் என்று கூறப்படுகிறது. காவல்துறையினருக்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளும், குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் குழுவும் செல்ஜாவின் வீட்டுக்கு விரைந்து சென்றது. செல்ஜாவின் வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் குடியிருப்பில் சஞ்ஜய்யின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.