ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு!

புதன், 23 மார்ச் 2022 (13:09 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. கொரோனா  வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைய குறைய ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மிகவும் குறைந்துள்ளதை அடுத்து முழுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்