இந்த நிலையில் சமால் தன் கையில் வைத்திருந்த பாத்திரத்தை முதலையின் நெற்றி மற்றும் கண்களில் தாக்கினார். இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்த முதலை அவரை விட்டுச் சென்றது. இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், தண்ணீருக்குளிருந்து பாய்ந்து வந்த முதலை என்னை தண்ணீருக்குள் அடியில் இழுத்துச் சென்றது. அப்போது என் கையில் இருந்த பாத்திரத்தால், அதனை தாக்கினேன். இதையடுத்து அந்த முதலை என்னை விட்டுச் சென்றது என்றார்.