சமீபத்தில் பாஜகவினர் இந்தியாவில் யாரும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்ற முழக்கத்தை கையிலெடுத்தார்கள். உத்திரப்பிரதேசத்தில் தாத்ரி எனும் கிராமத்தில், மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஒரு முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹரித்துவாரில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அவர் “பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை கிடையாது. பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு நாட்டில் வாழ உரிமை கிடையாது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதனையும் செய்யும்” என்று பேசியிருக்கிறார்.