நீண்ட காலம் கழித்து 2 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

புதன், 19 அக்டோபர் 2022 (10:05 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,946 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,34,376 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,923 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,79,485 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 25,968 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்