4 ஆயிரத்தை தாண்டியது கொரோனா – அதிர்ச்சியில் மக்கள்!

திங்கள், 6 ஏப்ரல் 2020 (09:36 IST)
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இந்தியா முழுவதும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 571 ஆக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்