10 ஆயிரமாக சரிந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:01 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,42,96,237 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 443 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,58,880-ஆக அதிகரித்துள்ளது. 
 
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,36,83,581 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,53,776 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்