இதை காங்கிரஸ் உட்பட பல கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வளவு நாட்களாக மனைவியை மறைத்தது ஏன் என்று கூறி, தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்தனர்.மேலும், திருமணம் செய்த மனைவியை மறைத்த ஒரு நபரிடம் எவ்வாறு நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெரிவித்த சிவசேனா கட்சி, நரேந்திர மோடிக்கும் யசோதா பென்னுக்கும் மிக, மிக இளம் வயதில் திருமணம் நடந்தது. பிறகு தனித்து வாழ்வது என்று இருவரும் பரஸ்பரம் பேசி முடிவு செய்து பிரிந்துள்ளனர்.