போராட்டம் குறித்து சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை. எனவே, எங்களது போராட்டம் நாளையும் தொடரும்" என்றார்.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் வெங்கய்யா நாயுடு பேசும்போது, "சுஷ்மா சுவராஜ் மத்திய அரசின் சொத்து. சிவ்ராஜ் சவுகான், வசுந்தரா ராஜேவும் நல்லாட்சி செலுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் அதற்காக அர்த்தமற்ற கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முடியாது" என்றார்.
மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி, மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்பிக்களில் 25 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமையன்று உத்தரவிட்டார்.