இந்நிலையில், திங்கள்கிழமை காலை மக்களவை தொடங்கியதும், லலித் மோடி விவகாரத்தை கையில் எடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி. அதீர் ரஞ்சன் சௌத்ரி பதாகைகளை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டார்.
பின்பு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டு பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எம்.பி.அதிர் ரஞ்சன் சௌத்ரியை, கூட்டத் தொடரில் இருந்து ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.