பிரியங்கா காந்தியா? பிரியங்கா சோப்ராவா? – கன்ஃப்யூஸ் ஆன காங்கிரஸார்!

திங்கள், 2 டிசம்பர் 2019 (16:29 IST)
டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பிரியங்கா காந்திக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா என கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் ஆகியோர் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி குறித்து பல விஷயங்களை பேசிய சுரேந்தர், பேசி முடிக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் நீடூடி வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் ‘ஜிந்தாபாத்’ என்று முழங்கினார். அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்களை சொன்ன சுரேந்தர் கடைசியாக பிரியங்கா காந்தி என்று கூறுவதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா என முழங்கினார்.

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சோப்ரா அவருக்கு சைகை காட்ட தவறை உணர்ந்த சுரேந்தர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்கா சோப்ரா வாழ்க என கூறிய அந்த வீடியோ இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

#WATCH Delhi: Slogan of "Sonia Gandhi zindabad! Congress party zindabad! Rahul Gandhi zindabad! Priyanka Chopra zindabad!" (instead of Priyanka Gandhi Vadra) mistakenly raised by Congress' Surender Kr at a public rally. Delhi Congress chief Subhash Chopra was also present.(01.12) pic.twitter.com/ddFDuZDTwH

— ANI (@ANI) December 1, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்