சமாதனத்துக்கு அடையாளமாக விளங்கும் புறாக்களை தனி பெட்டிகளில் அடைத்து அதை ராக்கெட் பட்டாசுகளில் கட்டி விண்ணில் செலுத்துவோம். ராக்கெட் பட்டாசு வெடிக்கும் போது பெட்டிகளும் வெடிக்கும் அப்போது அதில் இருக்கும் புறாக்கள் வானில் சிறகடித்து பறக்கும். இதனைப் பார்த்து தலைவர் ஆனந்த மகிழ்ச்சியடைவார் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் ஐடியா.