உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் போது, அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அஜய் ராய் வாக்களிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை உடையில் அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.