சைவ உணவில் கரப்பான் பூச்சி: ஏர் இந்தியா விமான சேவையின் நிலை?

வியாழன், 17 நவம்பர் 2016 (14:06 IST)
ஐதராபாதிலிருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சைவ உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


 
 
ஐதராபாதிலிருந்து டெல்லி வழியாக அமெரிக்காவின் சிகாகோவுக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அதில் பயணித்த ராகுல் ரகுவன்சிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அதில் ஒரு கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
இதையடுத்து விமான ஊழியரிடம் முறையிட்ட ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்கப்பட்ட கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவை படம்பிடித்து பதிவேற்றியுள்ளார். 
 
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி தனஞ்செய் குமார் எங்கள் விமானத்தில் பயணித்த ராகுல் என்பவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து மிகவும் வருந்துகிறோம். இந்த தவறு குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்