மத்தியில் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு கங்கை நதியைச் சுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கைக் குறித்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதன்படி செயல்பட்டால் கங்கை நதியை 200 ஆண்டுகள் ஆனாலும் தூய்மைப்படுத்த முடியாது போலிருக்கிறதே.
இதையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் 2, 500 அடி நீளமுள்ள கங்கை நதியை மூன்றுக் கட்டங்களாகத் தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், முதற்கட்ட தூய்மையை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என்றும், இரண்டாம் கட்டத் தூய்மைப் பணிகளை முடிக்க 5 ஆண்டுகள் ஆகும் என்றும், 3ஆம் கட்டத் தூய்மைப் படுத்தும் பணிகளை முடிக்க 10 ஆண்டுகள் ஆகும் என்றும், ஆக மொத்தத்தில் கங்கையைத் தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.