அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "தூய்மை இந்தியா' திட்டத்தை புது தில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அனில் அம்பானி, சச்சின் தெண்டுல்கர், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, சசி தரூர் உள்ளிட்ட 9 பிரபலங்களை இத்திட்டத்தில் பங்கேற்க வருமாறும், அவர்கள் 9 பேரும் தலா 9 பேரை இத்திட்டத்தில் பங்கேற்க செய்யுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.