பூட்டிய காரில் மூச்சுத்திணறி பலியான சிறுவர்கள்

சனி, 11 ஜூன் 2016 (17:19 IST)
எதிர்பாரதவிதமாக கார் கதவுகள் பூட்டிக் கொண்டதில், காருக்குள் இருந்த 2 சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.


 

 
ஜெய்பூர் மாவட்டம் புகியா கிராமத்தில் கிரண் பவரா(8), வினோத் பவ்ரா(4) என்ற சிறுவர்கள் பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் கதவுகள் பூட்டிக் கொண்டது. இதனால் காருக்குள் இருந்த இரண்டு சிறுவர்களும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
 
காருக்குள் இருக்கும் சிறுவர்களை கண்ட காரின் உரிமையாளர், சிறுவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆன காரணத்தால் சிறுவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்