தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், ”நாட்டில் நடைபெறும் அனைத்திற்கும் அரசையே குறை கூறாதீர்கள். இது இரு குடும்பங்களுக்கு இடையேயான பகையால் நிகழ்ந்தது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் கருத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்ரேவாலா கூறும்போது, “இது கண்டனத்துக்குரிய கருத்து, அதிர்ச்சிகரமான கருத்து, மனிதத் தனமையற்ற பேச்சு, தலித் சமுதாயத்தினரை மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அவரது பேச்சு புண்படுத்தியுள்ளது.