தலை மற்றும் கால் வெளியே தெரியுமாறு குழந்தை புதைக்கப்பட்டிருந்தது. மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குழந்தையின் தந்தை வினோத் சிங் பாகல் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி யார் என்பதை அறிய அந்த கிராம மக்களும் ஆவலுடன் இருக்கின்றனர்.