சந்திரபாபு நாயுடுவின் வாக்கு செல்லாது என மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

வியாழன், 1 மே 2014 (09:53 IST)
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில்,  நேற்று ஐதராபாத்தில் வாக்களித்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர்  சந்திரபாபுநாயுடுவின் வாக்கு செல்லாது என மாநில  தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

நேற்று  ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடிக்கு, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு அவரது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டனி காரணமாக நான் பாஜக விற்கு வாக்களித்தேன் என தெரிவித்தார்.

தேர்தல் வாக்குப்பதிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பன்வர்லால், தேர்தலில் வாக்களித்தபின் ஒரு தலைவரோ அல்லது தனிநபரோ தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது.

சந்திரபாபு நாயுடு தான் யாருக்கு வாக்களித்தார் என்பதை தெரியப்படுத்தியதால்  அவர் பதிவு செய்த வாக்கை செல்லாத வாக்காக  அறிவிக்கிறோம் என்று  அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்