அதில் பெண்களின் உடல்நலம், மனநலம், குறிப்பிட்ட சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் கருக்கலைப்பு செய்து கொள்ளும் காலத்தை 24 வாரங்கள் வரை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறக்கப் போகும் குழந்தை உடல் நலம் குன்றியோ, மனவளர்ச்சி குன்றியோ ஏதேனும் குறைபாட்டுடன் பிறக்கும் என்பது மருத்துவ ரீதியாக தெரியவரும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பை குறிப்பிட்ட சூழலில் மேலும் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.