சம்பா சாகுபடி பயிரைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் தேவைப்படுவதால், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது வாதாடிய கர்நாடக அரசு வழக்கறிஞர், கர்நாடக அணைகளின் நீர்இருப்பு எவ்வளவு? அணைகளிலிருந்து எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது உள்ளிட்டவை குறித்து தகவல் தெரிந்த பிறகே இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று வாதிட்டார்.