டி- ஷர்ட்டில் மதவாசகம் - சல்மான் கான் மீது வழக்கு

சனி, 13 செப்டம்பர் 2014 (13:42 IST)
நடிகர் சல்மான் கானின் தொண்டு நிறுவனம் நடத்திய பேஷன் ஷோவில் மதவாசகம் இடம் பெற்றதால் அவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு சொந்தமான தொண்டு நிறுவனம் சார்பில் மும்பையில் பேஷன் ஷோ நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடல்கள் அரபிக் மொழியில் மத சம்பந்தப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்த டிஷர்ட்டுகள் அணிந்திருந்தனர்.

இது தொடர்பாக முகம்மத் அசிம் அலி என்னும் நபர்,  மதவாசகம் எழுதப்பட்ட டிஷர்ட்டுகளை மாடல்கள் அணிந்திருப்பது மத கோட்பாடுகளுக்கு எதிரானது. எங்களை காயப்படுத்தும் வகையில் உள்ளது என சல்மான் கான் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்