இந்நிலையில், சாப்பிடுவதற்காக அமர்ந்திருக்கும் அந்த குழந்தைகளை இரக்கமின்றி ஒரு பெண் பராமரிப்பாளர் சூடு வைக்கும் வீடியோ வெளிவந்திருக்கிறது. ஒரு பெண் கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்குகிறார். அதன்பின், அதை மற்றொரு பெண்ணிடம் கொடுக்கிறார்.
கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல், அந்த பெண் அந்த செயலை சாதரணமாக இதை செய்கிறார். இதைக் கண்ட பலரும் சமூகவலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். அந்த பெண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.