பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் அருகில், கனமழையின் காரணமாக ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் ஸ்கார்பியோ கார் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்த காயமுமின்றி உயிர் தப்பினர். இந்நிலையில் காரின் உரிமையாளர் இந்த விபத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.