பெங்களூரு மல்லேசுவரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். பாஜக பிரமுகரான இவருக்கு நேற்று முன் தினம் பெங்களூரு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராத ரசீது ஒன்று வந்தது. அதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயம்தான். அந்த அபராத ரசீதில் அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு, கடந்த 4ம் தேதி பசவேசுரா சர்க்கிளில் இந்த வாகனம் சென்ற போது, அதன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அதனால் ரூ. 100க்கு இந்த அபராத ரசீது அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.