பெங்களூருவில் வணிக கருத்தரங்கில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
வணிக சூழலை மேம்படுத்த 15 மாதங்கள் நாம் கடுமையாக உழைத்துள்ளோம். உற்பத்தித்துறையை முடுக்கி விடுவதற்காக மே இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ரீதியில் இந்தியா ஜெர்மனி இணைந்து செயல்பட பல வாய்ப்புகள் உள்ளன என்றும் தொழில் மற்றும் கட்டமைப்பு துறைக்கு அனுமதியை மிக விரைவாக மத்திய அரசு தந்து வருகிறது என்றும் நரேந்திர மோடி கூறினார்.