கல்கத்தாவை சேர்ந்த தன்மே கோசுவாமி(40) என்பவர், திருமண இணைய தளத்தில் தன்னை நேரடி வரி துணை கமிஷனர் என்று போலியாக விளம்பரம் கொடுத்து மும்பை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் வசதி படைத்த பெண்களுக்கு வலை வீசி அவர்களை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஹேமந்த் குப்தா என்ற பெயரும் உண்டு.
இன்னும் எத்தனை பேர் இவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். மேலும், இவரிடம் ஏமாந்தவர்களை தொடர்பு கொண்டு, குப்தா அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்ற தகவலை விசாரித்து வருகின்றனர்.