இந்நிலையில், நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் அளிப்பதை தடை செய்யும் அவசர சட்ட திருத்த மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக கொண்டு வந்துள்ளது.
இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலை மூலம் வழங்கவும் மட்டுமே முடியும்.
ஆனால், ஏற்கனவே பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால், பொதுமக்கள் தினசரி தேவைகளுக்கு வங்கிகளில் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலையில், ஊதியமும் கைக்கு வராமல் செய்தால் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று சிறு, குறு தொழிற்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வருத்ததோடு தெரிவிக்கின்றனர்.