ஆந்திரா, சத்தீஸ்கர், சிக்கிம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அசாம், குஜராத், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களிலுள்ள 33 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் காலை முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைப்பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி, முலாயம் சிங், சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அதில் மோடி வதோதரா, முலாயம்சிங் மணிப்புரி, சந்திரசேகரராவ் மேடக் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து வதோதரா, மணிப்புரி, மேடக் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அனைத்து தொகுதியிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.