இந்தியாவில் 10 மாநிலங்களில் சில நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகையில், பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நாட்டை ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக அமைந்துள்ளன.
இந்த இடைத்தேர்தலில் முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற, குஜராத் மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதியான வதோராவும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்ற மெய்ன்புரி மக்களவை தொகுதி, இந்தியாவில் புதியதாக தோன்றியுள்ள தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வர் சந்திரசேகரராவ், முன்னதாக வெற்றி பெற்ற மேடக் மக்களவை தொகுதி ஆகியவற்றிலும் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை வந்து கொண்டிருக்கும் தகவல்கள் படி, அந்தத் தொகுதிகளில் அந்தந்த ஆளும் கட்சிகளே முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது.