இந்த விருந்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஷூ அணிவதற்கு பதிலாக செருப்பு அணிந்து சென்றிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த செயலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த தொழில் அதிபர் சுமித் அகர்வால் அதிருப்தி தெரிவித்து, அவருக்கு ஷூ வாங்கிக்கொள்ள ரூ.364-க்கு வரைவோலை மற்றும் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.
அவர அனுப்பிய கடிதத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டீர்களே தவிர, ஜந்தர் மந்தரிலோ, ராம்லீலா மைதானத்திலோ நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஒரு பொது விளம்பரத்திற்காகத்தான் நீங்கள் செருப்பை பயன்படுத்துகிறீர்களா? ஒருவர் தனது வசதிக்கேற்ப உடையோ, செருப்போ அணிவது அவரது தனிப்பட்ட சுதந்திரம் தான். ஆனால், சில இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தனிப்பட்ட விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.