பணக்காரர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்கள் அவர்கள் வீட்டு திருமணத்தை மிக பிரம்மாண்டமாக கோடி கணக்கில் செலவு செய்து நடத்துவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மகள் திருமணத்திற்கு செலவிட இருந்த பணத்தில் வீடற்றவர்களுக்கு 90 வீடுகள் வழங்கியுள்ளார். இது உண்மையில் பாராட்டத்தக்கது.
அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த தொழிபதிபர் அஜய் முனாட் என்பவர், தனது மகள் திருமண விழாவிற்கு 70 முதல் 80 லட்சம் வரை செலவிட இருந்தார். திருமணத்தில் தேவைற்ற செலவுகளை குறைத்து, வீடற்றவர்களுக்கு 90 வீடுகள் வழங்கினார்.