முதலிரவை ரகசிய வீடியோ எடுத்த மணமகன்.. வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்டதால் மணமகள் அதிர்ச்சி

வெள்ளி, 3 மார்ச் 2023 (14:42 IST)
முதலிரவு காட்சிகளை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து அதை வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்ட மணமகன் செயலால் மணமகள் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த வீரபாபு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு முதல் இரவு ஏற்பாடு செய்த நிலையில் வீரபாபு தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தார். அதன் பிறகு அவர் அந்த வீடியோவை தனது வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்ட நிலையில் அதை பார்த்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும்  மணமகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதனை அடுத்து மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணமகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே முதல் இரவு காட்சிகளை படம் பிடித்ததால் புது மாப்பிள்ளை சிறைக்கு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்