மணப்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு - திருமணத்திற்கு முதல் நாள் இரவு நடந்த கொடுமை

சனி, 26 நவம்பர் 2016 (17:06 IST)
திருமணத்துக்கு முந்தையநாள் இரவு மணமகளின் முகத்தில் இரு பெண்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் மணமகள் தயார் செய்யப்பட்டு உள்ளார்.

அப்போது, மணமகள் மட்டும் தனது பாட்டியுடன் அறையில் இருந்துள்ளார். அப்போது, பெண்ணின் அறைக்குள் இரண்டு பெண்கள் புகுந்துள்ளனர். அதில், ஒருவர் மணமகளை பிடித்துக்கொள்ள, மற்றொரு பெண் அவரது முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

வலியால் அந்த இளம்பெண் அலறித் துடித்துள்ளார். ஆனால், ஆட்கள் வருவதற்குள் அறையின் வெளிக்கதவை தாளிட்டுவிட்டு, இரு பெண்களும் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் ஏன் இந்த இளம்பெண் மீது ஆசிட் வீசினர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்