பெங்களூரில் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவியை கடத்தி, அவரை அரை நிர்வானமாக்கி புகைப்படம் எடுத்ததால், மனமுடைந்த அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள சிக்காலஜாவில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி, திங்கட்கிழமை பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள சில சிறுவர்களால கடத்தப்பட்டார். அவரை ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற அவர்கள், அவரை மிரட்டி, கட்டாயப்படுத்தி அரை நிர்வாணம் ஆக்கி புகைப்படம் எடுத்துள்ளனர்.
அதில் “என் சாவுக்கு கிருஷ்ணமூர்த்தி,மோகன் இருவருமே பொறுப்பு. அவர்களும், அவர்களின் நண்பர்களும் சேர்ந்து நான் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது என்னை கடத்திச் சென்றனர். என்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தனர். என் மானம் போனதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே நான் உயிரை விட முடிவு செய்தேன். எனக்கும், என் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும். இந்த கடிதத்தை நானே எனது கைப்பட எழுதியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.