மஹாரஷ்டிரா மாநிலம் தானேவில் இரண்டு சிறுவர்கள் 5 ரூபாய் முறுக்கினை திருடி தின்றதற்காக அவர்களை கடையின் உரிமையாளர் நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து கொடுமைப்படுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இதனை பார்த்த கடைக்காரர் சிறுவர்களிடம் சாப்பிட்ட முறுக்குக்கு காசு கேட்டுள்ளார். ஆனால் சிறுவர்களிடம் காசு இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர் தனது மகன்களை அழைத்து சிறுவர்களின் தலைமுடியை அசிங்கமாக வெட்டி, அவர்களது உடைகளை கழற்றி அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்.