பிறந்த ஆண் குழந்தையின் வயிற்றில் மற்றொரு கரு..? – பீகாரில் ஆச்சர்ய சம்பவம்!

திங்கள், 30 மே 2022 (13:39 IST)
பீகாரில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை வயிற்றில் கரு இருந்தது கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் நிலையில் சில குழந்தைகள் பிறப்பதில் ஆச்சர்யமான சம்பவங்கள் சில நடந்துவிடுகிறது.

பீகாரில் தம்பதியர் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 40 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அன்றாட பரிசோதனை மேற்கொண்டபோது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தி அந்த கரு அகற்றப்பட்டுள்ளது. குழந்தையின் வயிற்றுக்குள் கரு உருவாகும் Fetus in Fetu என்ற அரிய வகை பிரச்சினை 5 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது,.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்