பீகார் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

வெள்ளி, 23 ஜனவரி 2015 (13:50 IST)
பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா நகரத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர், 10 க்கும் மேற்பம்டோர் படுகாயமடைந்துள்ளனர். 
 
நண்பகல் 12 மணியளவில் ஒரு பெண்  சக்தி வாய்ந்த வெடிகுண்டோடு நீதிமன்றத்திற்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தத் தாக்குதலில் அந்தப்பெண் சம்பவ இடத்தில் பலியானதாகவும், மேலும் நீதிமன்றத்தினுள் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவரும் பலியானதாகவும் மேலும் 10 க்கும் மேற்பம்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்