மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கர்னல் திப்தான்சு சவுத்திரி, மேற்கு வங்க பாஜக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக தேசிய செயலாளர் சித்தார்த்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் கார்கில் போரில் இறுதி நாள் வரை தீரத்துடன் பணியாற்றியவர் என்பதால், அவருக்கு கூடுதல் மரியாதை தரப்படுகிறது.