இந்திரா காந்தி தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணி சீக்கியர்களின் புனித தளமான பொற்கோயிலுக்குள் இராவணுத்தை நுழைய அனுமதித்தார். இதனால் சீக்க்கியர்கள் கடும்கோபம் அடைந்தனர். மேலும், 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை [10.05.15] சண்டிகரில் நடைபெற்ற விழாவில் பஞ்சாப் சட்டப்பேரவை தலைமை செயலாளர் பிர்சா சிங் பேசுகையில், ’முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்தவர்களை தியாகிகள்’ என்று பாராட்டி பேசியுள்ளார். இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் லட்சுமி காந்த் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்றவர்களை தியாகிகள் என்று கூறுவது மிகவும் வருந்தத்தக்க விஷயம். அவருடைய பேச்சு தேச விரோத சக்திகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்து விடும்.