பாடகர் சித்து மூசாவாலாவை கொலை செய்ய திட்டமிட்டேன்: பிஷ்னோய் வாக்குமூலம்.

சனி, 18 ஜூன் 2022 (08:10 IST)
பாடகர் சித்து மூசாவாலாவை கொலை செய்ய திட்டமிட்டேன் என்றும் ஆனால் தான் கொலை செய்யவில்லை என்றும் கைதான பிரபல ரெளடி பிஷ்னோய் வாக்குமூலம் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா மர்ம மரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல ரவுடி பிஷ்னோய்  இதுகுறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் 
 
அவரது வாக்குமூலத்தில் பாடகர் சித்துவை தான் பழி வாங்கும் நடவடிக்கையாக கொலை செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால் தனக்கு முன்பே தனது கூட்டாளிகள் இந்த கொலையை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவரது இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் சித்துவை பின்பற்றி தொடர்ந்த கொலையாளிகள் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்