கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம், திட்டா மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் விரைந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டம் முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் கால்நடைத் துறை மந்திரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக, பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்த்து வரும் வாத்துகள், கோழிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானப் பறவைகளை கொல்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.