பினாமி சொத்துகள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யவும், விசாரணைக்கு உத்தரவிடவும் முடியும். இதனால் பினாமி சொத்துகளின் பெயரில், கருப்புப் பணம் பதுக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், சொத்துரிமைச் சட்டத்தை திருத்தவோ அல்லது வருமான வரிச் சட்டத்தில் மேலும் ஒரு விதியை இணைக்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.