அப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். உங்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? என அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
ஓராண்டு காலமாக நாட்டை ஆண்டுவரும் மோடி, விலைவாசியை குறைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, முன்னர் 70 ரூபாயாக இருந்த துவரம் பருப்பின் விலை இப்போது 200 ரூபாயாக ஆகிவிட்டது.
"ரொட்டியும், பருப்பும் சாப்பிடுங்கள், ராஜாவின் புகழைப் பாடுங்கள் என்று மக்கள் முன்னர் பாடி வந்தனர். ஆனால், இப்போது அவர்களை எல்லாம், ரொட்டியும், பருப்பும் சாப்பிடாமல், ராஜாவின் புகழைப் பாடுங்கள் என்று பாடும் நிலைக்கு மக்களை அவர் தள்ளிவிட்டார்.