பீகார் சட்ட மன்ற தேர்தல்: வெற்றிக் கனிகளை பறித்த லாலு மகன்கள்

ஞாயிறு, 8 நவம்பர் 2015 (21:44 IST)
பீகாரில் சட்ட மன்றத் தேர்தலில், லாலு பிரசாத் இரு மகன்களும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
 

 
பீகார் சட்ட மன்ற தேர்தலில், மகுவா தொகுதியில், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ்  போட்டியிட்டார். இதில் அவர் 66,927 வாக்குகள் பெற்றார். சுமார் 28,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
அதேபோல, லாலுவின் மற்றொரு மகனா தேஜஸ்வி பிரதாப் யாதவ், ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டு, 91,236 வாக்குகள் பெற்றார். சுமார்  22,733 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிக்கனியை பறித்தார். இதனால், லாலு பிரசாத் மிகுந்த மகிழ்ச்சிகளில் மூழ்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்