அவர் தனது மனுவில் பெண் எம்.எல்.ஏ பவனா கவுர் கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது வேட்புமனுவில் தான் பிளஸ் 2 முடித்ததாக கல்வி சான்றிதழ் கொடுத்தார். ஆனால் 14 மாத இடைவெளியில் நடந்த 2015 ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்போது அவர் தனது வேட்புமனுவில் பி.ஏ மற்றும் பி.எட் படித்ததாக கூறியுள்ளார். பி.ஏ. படிக்க 3 ஆண்டுகளும், பி.எட் படிக்க 2 ஆண்டுகளும் என 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் அவர் 14 மாத காலத்திற்குள் கூடுதலாக 2 பட்டப்படிப்பு படித்தாக கூறி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிமன்ற நீதிபதி பங்கஜ் சர்மா இந்த புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, வழக்கு விசாரணையை 25 ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டார்.